தெய்வக் குழந்தை* அந்தோனி முத்து



இசைதான் வாழ்க்கை என்று இசையைக் கற்ற அக்குழந்தை பாதியில் படிப்பை நிறுத்திய சோகத்திற்கு காரணம், வாழ்ந்தே ஆகவேண்டுமே என்ற தீராவிருப்பே.



பி.ஏ இசை இரண்டாம் வருடம் முடித்துவிட்டு மூன்றாம் வருடம் செல்ல இயலவில்லை.மூன்று வருட திரையிசை முயற்சிக்குப் பிறகு இசையை விட்டு விட்டு, கணினியில் ஏதேனும் வேலை செய்ய வேண்டும். யாரையும் சார்ந்திருக்காது தன் உழைப்பில் வாழ வேண்டும் என்பது இவரின் விருப்பம்.



இதில் என்ன விஷயம் இருக்கிறதென்று பார்க்கிறீர்களா?இதுதான் விஷயமே. மனம் தளராத ஊக்கம் குறையாத இக்குழந்தை வசிப்பது ரெட்ஹில்ஸில்.



அப்போது அக்குழந்தைக்கு வயது 11. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தவறி ஒரு கிணற்றில் விழ நேர்ந்த விபத்தில், கழுத்துக்குக் கீழே எந்த உணர்வும் இல்லை. குழந்தையைப் பார்ப்பது போன்றே இவரைக் கவனிக்க வேண்டும். கைகள் மட்டும் உணர்வுடன் செயல்படும். கைகளும் மூளையும் போதும் என்கிறார் தான் உழைப்பதற்கு.



பிறந்தது விவசாய குடும்பத்தில். உடன்பிறந்தவர்கள் 7 சகோதரிகள். ஒருவர் கிறுத்துவ துறவி. மற்ற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. 25 ஆண்டுகளாக இந்நிலையில் இருக்கிறார்.



இப்போதைய அத்தியாவசிய தேவை:

1. படுத்திருப்பதால் பெட்ஸோர் ஏற்படுகிறது. அதனால் ஒரு படுக்கை.



2. மடிக் கணினி.



3. வீட்டில் முடங்கிக்கிடப்பதுதான் இருக்கவே இருக்கிறது. புது உலகைக் காண வெளியே வர, பாடம் கற்று பணிபுரிய சக்கர நாற்காலி.



எப்போதுமான தேவை:

அவருக்குகந்த வேலை.



பரிதாபத்தையோ, அனுதாபத்தையோ இவர் எதிர்பார்க்கவில்லை. அன்பையும் நட்பையும் போற்றும் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்புக் குழந்தை. உழைப்பின் மதிப்பறிந்த இக்குழந்தையை வாழ்த்துவோம். உரியதை அளிப்போம்.



இவரின் விலாசம், தொலைபேசி எண், மெயில் ஐடி கீழே கொடுத்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.



Mr. S. Anthony Muthu

C/O. Mr.J.Dharmaraj5/96

Cheran Street

KK Nagar

Pammadhu KulamRedhills

Chennai 600052

Tamil Nadu, India


Phone Number : 26323185

Mobile Number: 94444 96600


Email: anthonymuthu1983@yahoo.com

anthonymuthu1983@gmail.com *


17  மறுமொழிகள்

தகவலுக்கு நன்றி மது.

தொடர்பு கொள்ளுவோம்.  
நன்றி துளசிம்மா.

புதன்கிழமையில் துளசியே கிடைத்தால் வேறென்ன மருந்திற்கான தேவை இருக்கிறது:-)  
நன்றி சுரேஷ்.

அந்தோனியை அறிமுகம் செய்த உங்கள் நல்மனதிற்கு இறைவனின் ஆசீர்வாதம் என்றும் கிடைக்கட்டும்.  
மிக்க நன்றி மதுமிதா,

அன்புக்குழுந்தை அந்தோணியின் தேவைகள் பூர்த்தி செய்து அவருக்கு ஒரு மறுவாழ்வு கொடுத்து மகிழ பலர் முன் வர உங்களின் இந்த பதிவு உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்க எனது பிரார்த்தனைகள்

அன்புடன்
என் சுரேஷ்  
அதிலும் அந்தோனி சொன்ன அந்த வாசகம் என்னைப் பாடாய்ப்படுத்தி விட்டதுங்க சுரேஷ்.

25 வருடம் இந்த‌ வாழ்க்கையிலும் அந்த மனம் மாறாமல் தூய்மையாய் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட விந்தை இயற்கை அவருக்கு அளித்த கொடைங்க.  
இவன் தான்
மனிதன்!

இவன் போன்றோருக்கு
உதவ மனமிருந்தால்
மனதிரில் புனிதன்  
நன்றி மதுமிதா - இம்மாதிரி பதிவுகள் தேவையான ஒன்று. தேவையானவர்களுக்கு சரியான உதவி செய்யக் காத்திருக்கும் நல்ல உள்ளங்களை இப்பதிவுகள் மூலமாக செய்திகள் சென்றடையும் போது அந்தோனி முத்து போன்றவர்கள் பயனடைவார்கள்.  
Hi friend

thanks for ur information, I will try to contact Mr.Anthony Muthu...

Regards  
மதுமிதா - சுரேஷ், என்றென்றும் அன்புடன் பாலா என சிலரும் தங்களைத் தொடர்ந்து இவ்வரிசையில் பதிவுகள் இட்டிருக்கின்றனர். நானும் ஒரு பதிவு இட்டிருக்கிறேன்,

பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2008/01/blog-post_1562.html  
என்னாலான சிறிய உதவித்தொகையை அனுப்புகிறேன். என்றென்றும் அன்புடன் பாலாவைத் தொடர்பு கொள்கிறேன்.  
நன்றி சீனா, விஜி, சேதுக்கரசி  
மதுக்கா
இதோ ஒரு வாரத்தில் சென்னை வரும் போது அந்தோணி முத்தைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்! அன்புடன் பாலாவைத் தொடர்பு கொள்ளும் போது மேலுதவிகள் குறித்துப் பேசுகிறேன்!  
மது நலமா?

இன்னிக்குத் தினமலர்லே அந்தோனியைப் பத்தி வந்துருக்கு.

இவர் சொல்கிறார் என்ற பகுதி.  
நன்றி ரவி

துள‌சிம்மா நலம்தானே
தகவலுக்கு மிக்க நன்றி  
எட்டே மாதத்திற்குள் தேவையென அறிவித்த அனைத்தையும் அந்தோணிக்கு கிடைக்கச் செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி _^_

உள்ளம் நிறைந்த உவகையுடன் நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.  
எட்டே மாதத்திற்குள் தேவையென அறிவித்த அனைத்தையும் அந்தோணிக்கு கிடைக்கச் செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி _^_

உள்ளம் நிறைந்த உவகையுடன் நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.  
மது மிதா

தேவை என அறிந்த அனைத்துமே இறைவன் அருளால் கிடைக்கப் பெற்றது. உலகில் உள்ள நல்ல உள்ளங்கள் பல உதவின. இறையருள் துணை நிற்க, அனைத்துமே நிறைவேற்றப்பட்டது.

இதனைப் பற்றிய பதிவு இதோ :
http://cheenakay.blogspot.com/2008/08/blog-post.html

மதுமிதாவின் பதிவினைப் பற்றியும் ஏற்கனவே வலைசரத்தில் எழுதி இருக்கிறேன்  

Post a Comment